இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி !

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நேற்று இடம்பெற்ற...

Published September 24, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நேற்று இடம்பெற்ற போட்டியில் (23) இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

> இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில்,

– கமிந்து மெண்டிஸ் மாத்திரமே அதிகபட்சமாக 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

> பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில்,

– சஹின் ஷா அப்ரிடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், 134 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணியின் இவ் வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது, அவ்விதமே இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் இறுதிபோட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு குறைந்த வண்ணம் காணப்படுகின்றது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *