இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி !
ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நேற்று இடம்பெற்ற...
ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நேற்று இடம்பெற்ற போட்டியில் (23) இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
> இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில்,
– கமிந்து மெண்டிஸ் மாத்திரமே அதிகபட்சமாக 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
> பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில்,
– சஹின் ஷா அப்ரிடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில், 134 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணியின் இவ் வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது, அவ்விதமே இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் இறுதிபோட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு குறைந்த வண்ணம் காணப்படுகின்றது.