LATEST
24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!
உள்ளூர்

மனுஷ நாணயக்கார நாளை ஊழல் விசாரணைக்கு ஆஜர் !

September 25, 2025 · Tamil Ceylon LK

2023 ஆம் ஆண்டு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்கார, நாளை (26) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

இவ் விசாரணையானது 2023 நவம்பர் 5 திகதி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேல் அரசுடன் கையெழுத்திட்ட விவசாய வேலைவாய்ப்பு திட்ட ஒப்பந்தம் தொடர்பாகவும், ஊழல் சந்தேகங்கள் குறித்து விசாரணையோடு தொடர்புடையதாகும்.

முன்னர், இவ் விசாரணை குறித்து (08.09.2025) ஆணைக்குழுவில் ஆஜராக அவர் அழைக்கப்பட்ட போதும், வெளிநாட்டில் இருந்ததால் விசாரணையில் கலந்து கொள்ள தவறியிருந்தார்.

எனவே, நாளை காலை 9.30க்கு, கொழும்பு ஜாவத்த வீதி பழைய தேசிய அடையாள அட்டை அலுவலகத்தில் அமைந்துள்ள விசாரணைப் பிரிவு – IV இல் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›