மாத சம்பளத்தை கட்சி நிதிக்கு மாற்றுவது ஊழல் – கம்மன்பில முறைப்பாடு.
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில...
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது நிதியை தவறாக பயன்படுத்துவதாக இன்று (29) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.
அவரின் கூறலின்படி, 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கான மாத சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை கட்சி நிதியாக மாற்றி, அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இது சட்டவிரோதமானது என்றும், பொது நிதியின் தவறான பயன்பாடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் உதய கம்மன்பில கருத்து தெரிவிக்கையில்,
தொலைபேசி, எரிபொருள், அலுவலக பராமரிப்பு முதலான வசதிக்கென வழங்கப்படும் நிதியும் கட்சி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவது ஊழலுக்கே சமமானது எனக் கூறினார்.
மேலும், இந்த விடயத்தில் ஜனாதிபதி உட்பட 160 பேர் தொடர்புடையவர்கள் எனவும், அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கம்மன்பில வலியுறுத்தினார்.