ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரி அடையாளம்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான...
Published October 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுவிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
தனது x தளத்தில் பதிவொன்றின் ஊடக அவர் இதனை தெரிவித்துள்ளார்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யார் என்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிக்கான பதவியை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் போது ரவி செனவிரட்ன தம்மிடம் கூறியதாக நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
நிசாம் காரியப்பர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் இன்றைய தினம்(9) பதிவிட்டுள்ளார்.
