LATEST
22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!
உள்ளூர்

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ; 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

October 10, 2025 · Tamil Ceylon LK

பாதுக்கை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பாடசாலை உணவாயு உற்கொண்டு திடீரென சுகயீனமுற்று 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இன்று காலை பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 60 மாணவர்கள் திடீரென சுகயீனமுற்றதை தொடர்ந்து சுகயீனமுற்ற மாணவர்கள் அனைவரும் பாதுக்கை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 40 பேர் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ள நிலையில் ஏனையவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மூவர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் இவ்வாறு சுகயீனமுற்றுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாதுக்கை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

மேலும் ›