சிறிதரனுக்கு எதிராக பாராளுமன்றில் முறைப்பாடு. #Video

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் நடத்தை தொடர்பாக...

Published October 23, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் நடத்தை தொடர்பாக, பாராளுமன்றச் சிறப்புரிமை மற்றும் உறுப்பினர்களுக்கான நடத்தை நெறிமுறை மீறப்பட்டுள்ளதாகக் கூறி, சபாநாயகர் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையீட்டில், ஸ்ரீதரன் அவர்கள் அரசியலமைப்புச் சபையில் சிறுபான்மை எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அவருடைய நடவடிக்கைகள் அந்த எதிர்க்கட்சிகளின் ஒருமித்த முடிவுகளுக்கு மாறாக நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரின் நடத்தை, அரசியலமைப்புச் சபையில் சிறுபான்மை எதிர்க்கட்சிகளுக்காக வழங்கப்பட்டிருந்த பிரதிநிதித்துவ சமநிலையை பாதித்துள்ளதாகவும், இது அரசியலமைப்பின் உறுப்புரை 41A(1)(e) இல் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை கொள்கைகளுக்கு மாறானதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை நெறிமுறைகளில் — பொது நலனை முன்னிறுத்துதல், நேர்மை, நம்பகத்தன்மை, மற்றும் பாகுபாடின்றி செயல்படுதல் போன்ற அடிப்படை பண்புகள் — ஸ்ரீதரன் அவர்களின் நடத்தில் காணப்படவில்லை என்றும், இதனால் அவர் மீதான நம்பிக்கை சிறுபான்மை எதிர்க்கட்சிகளில் இழந்துவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையீட்டில், சபாநாயகர் அவர்களிடம் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது:
1. மேதகு ஸ்ரீதரன் அவர்களின் நடத்தை பாராளுமன்றச் சிறப்புரிமை மீறலாக அங்கீகரித்தல்,
2. விவகாரத்தை ஆச்சார மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு அனுப்பி விசாரணை நடத்துதல்,
3. அரசியலமைப்புச் சபையில் சிறுபான்மை எதிர்க்கட்சிகளின் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் புதிய உறுப்பினரை நியமித்தல்.

முறையீட்டில் மேலும் கூறப்பட்டுள்ளது:
இந்த விவகாரத்தை திறந்த அமர்வில் விவாதிப்பது பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்பதால், அது பாராளுமன்றத்தின் மரியாதையையும் அரசியலமைப்புச் சபையின் நம்பகத்தன்மையையும் காக்கும் வகையில் ஆச்சார மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.

  • முடிவாக, முறையீடு செய்பவர் தெரிவித்ததாவது,

“இந்த விவகாரம் சிறுபான்மை எதிர்க்கட்சிகளின் குரல் மற்றும் பாராளுமன்றத்தின் சுயாதீனத்தைக் காக்கும் முக்கியமான பிரச்சினையாகும்.
சபாநாயகர் அவர்கள் நியாயமான நடவடிக்கைகளை எடுத்து, பாராளுமன்றத்தின் மரியாதையையும் அரசியலமைப்பின் மதிப்பையும் நிலைநிறுத்துவார் என நம்புகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *