முல்லேரியா பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
முல்லேரியா, பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் வைத்து துப்பாக்கி மற்றும் ஐஸ்
Published November 5, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முல்லேரியா, பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் வைத்து துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சுற்றிவளைப்பு மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கைது செய்தபோது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றும், 9 தோட்டாக்களும், சுமார் 13 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடைய வெபட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.