யாழிற்கு புதிய உள்ளக விளையாட்டரங்கு
யாழ்.மாவட்ட மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் அங்கு
Published November 11, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ்.மாவட்ட மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் அங்கு உள்ளக விளையாட்டரங்கொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது.
170 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணப் பணிகள் இடம்பெறவுள்ளன.
இது குறித்தான விளையாட்டு அமைச்சின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.