கெலிஓயா கரமட விகாரைக்கு அருகில் பேருந்து விபத்து
கம்பளை - கண்டி பிரதான வீதியில் கெலிஓயா, கரமட விகாரைக்கு அருகில் இன்று இடம்பெற்
Published November 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா, கரமட விகாரைக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடைமீது மோதியுள்ளது.
அத்துடன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றையும் மோதி தள்ளி முன்சென்று, வீடொன்றின் மதில் மீது மோதி நின்றுள்ளது.
இதன்போது கடையில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்து வயது சிறுமி மற்றும் ஆணொருவர் காயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.