ஏற்றுமதி வருமானம் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியது!
இலங்கை வரலாற்றில் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட
இலங்கை வரலாற்றில் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த ஏற்றுமதி வருமானம் இதுவாகும்.
2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதி 6 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் நிலையான முன்னேற்றத்தையும் காட்டியுள்ளது.
இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் மற்றும் பெற்றோலியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களுடன் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, மொத்த ஏற்றுமதி வருமானம் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இது 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட ஒப்பீட்டளவில் தற்போது வளர்ச்சியைக் காட்டுகிறது, மேலும் ஒரு வருடத்தின் முதல் பத்து மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 14 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியது இதுவே முதற்தடவையாகும்.
இந்தக் காலகட்டத்தில் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி முதன்முறையாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.