5 வயது மகளைத் தாக்கிய தந்தை கொழும்பில் கைது
தனது 5 வயது மகளைக் கொடூரமாகத் தாக்கிஇ அதனை காணொளி எடுத்து வெளிநாட்டில்
தனது 5 வயது மகளைக் கொடூரமாகத் தாக்கி, அதனை காணொளி எடுத்து வெளிநாட்டில் இருக்கும் தனது மனைவிக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி மாதம்பிட்டிய பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர் கொழும்பு 15இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கைது செய்யச் சென்ற போது, அங்கு இருந்த பெண் ஒருவர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சித்துள்ளார். இதனையடுத்து, பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அந்தப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மாதம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.