60 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது
60 லட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கடத்தி
60 லட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கடத்தி வந்த இலங்கையர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – 12 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (23) அதிகாலை 03.50 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-654 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த மூன்று பயணப் பொதிகளில் (Luggage) மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் (200 பக்கெட்டுகள்) கைப்பற்றப்பட்டதாக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேகநபர் இன்று (23) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.