அநுராதபுரத்தில் தேசிய வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்

ஹிமிகம பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு..........

Published February 27, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஹிமிகம பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்றுபிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இதன் காரணமாக,தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களில் உள்ள நிபந்தனைகளை நீக்கி 1947ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கு இணங்க, அவற்றுக்குப் பதிலாக ‘பூரண அளிப்புப் பத்திரம்’ வழங்கப்படும். 

தங்கள் விருப்பத்தின் பேரில் அனுமதிப்பத்திரங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பவர்களுக்கு இந்த புதிய ‘ஹிமிகம’ உரித்து பூரண அளிப்புப் பத்திரம் வழங்கப்படவுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் 500 பயனாளிகளுக்கு இந்த அளிப்புப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. 

இதனைத் தொடர்ந்து இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டமானது விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *