LATEST
துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்
உள்ளூர்

மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல் : இருவர் கைது

March 25, 2026 · Tamil Ceylon LK

இன்று அதிகாலை 03.15 மணியளவில் துபாயிலிருந்து துபாய் (flydubai) நிறுவனத்திற்குச் சொந்தமான FZ-569 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை வந்த இரு பயணிகள், 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாகக் கடத்தி வர முயன்றபோது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 34 வயதுடைய ஆண் ஒருவர் கம்பஹாவைச் சேர்ந்தவர் என்றும், அவர் துபாயில் பணி மேற்பார்வையாளராக (Supervisor) பணியாற்றி வருபவர் என்றும் தெரியவந்துள்ளது. மற்றையவர் கண்டியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஆவார், அவர் துபாயில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில், எதனையும் அறிவிக்கத் தேவையில்லாத ‘பசுமை வழித்தடம்’ (Green Channel) வழியாக இவர்கள் வெளியேற முயன்றனர். இவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், அவர்கள் கொண்டு வந்த 08 சூட்கேஸ்களைச் சோதனை செய்தனர்.

சுமார் 500 அட்டைப் பெட்டிகளில் (Cartons) மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.இவை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ‘மான்செஸ்டர்’ (Manchester) மற்றும் ‘பிளாட்டினம்’ (Platinum) ஆகிய வர்த்தக நாமங்களைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் தொகுதியின் சந்தைப் பெறுமதி சுமார் 15 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Stories

மேலும் ›