கணினி பராமரிப்பு! தொழிலாளர் துறை சேவைகளுக்கு இடைநிறுத்தம்

கணினி அமைப்பில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் பொதுச் சேவைகள் இயங்காது என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி,
தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மண்டல, மாவட்ட, துணைத் தொழிலாளர் அலுவலகங்களில் உள்ள ஊழியர் சேமநிதி தரவு அமைப்பு மற்றும் டிஜிட்டல் இபிஎஃப் அமைப்பு தொடர்பான பொதுச் சேவைகள் இந்த இரண்டு நாட்களுக்குச் செயல்படாது என்று தொழிலாளர் துறை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறை தனது அறிவிப்பில் மேலும் கூறியுள்ளதாவது, இந்த இரண்டு நாட்களில் உதவித்தொகை வழங்குதல் மற்றும் பதிவுகள் உள்ளிட்ட பொதுச் சேவைகள் கிடைக்காது என்பதால், அந்த நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக முன்பே முன்பதிவு செய்தவர்கள், ஒரு மாதத்திற்குள் எந்தவொரு அலுவலக நாளிலும் சம்பந்தப்பட்ட தொழிலாளர் அலுவலகத்திற்குச் சென்று தேவையான சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.




