LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உள்ளூர்

மலேசியா ஊடாக சிகரெட் கடத்த முயன்ற 3 சீன தொழிலதிபர்கள் கைது!

May 25, 2026 · Tamil Ceylon LK

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் “பசுமை வழித்தடம்” (Green Channel) வழியாக, சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று வெளிநாட்டு பயணிகள் இன்று (25) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீன நாட்டு தொழிலதிபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக இவர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சிகரெட் தொகையை சீனாவில் கொள்வனவு செய்துள்ள இவர்கள், முதலில் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து இன்று (25) அதிகாலை 1.05 மணிக்கு “பாடிக் ஏர்” (Batik Air) நிறுவனத்திற்குச் சொந்தமான OD-297 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலைய வருகை முனையத்தில், எவ்வித பொருட்களும் தங்களிடம் இல்லை என அறிவிக்கும் “பசுமை வழித்தடம்” (Green Channel) ஊடாக தப்பிச்செல்ல முயன்றபோதே, சுங்க அதிகாரிகள் இவர்களை மறித்துச் சோதனை செய்துள்ளனர்.

இவர்கள் கொண்டு வந்த 6 பயணப் பொதிகளை (Suitcases) சோதனை செய்தபோது, அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 40,400 சிகரெட்டுகள் அடங்கிய 202 சிகரெட் அட்டைப் பெட்டிகள் (Cartons) கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த சந்தைப் பெறுமதி 660,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சீன தொழிலதிபர்கள் மூவரிடமும், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

மேலும் ›