LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உலகம்

ஹோர்மூஸ் வழியாக பாகிஸ்தான்–சீனாவை நோக்கி எரிவாயு கப்பல்கள்!

May 25, 2026 · Tamil Ceylon LK

இயற்கை எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் மற்றும் சீனாவை நோக்கி பயணிப்பதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடல்வழி கண்காணிப்பு தரவுகளை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக, குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘புவைரித்’ (Fuwairit) என்ற கப்பல் நாளை பாகிஸ்தானில் தனது சரக்குகளை இறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் கடந்த மார்ச் மாதத்தில் கட்டாரில் சரக்குகளை ஏற்றியிருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.இதனிடையே, இரண்டாவது கப்பலான ‘அல் ரய்யான்’ (Al Rayyan) கப்பலும் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துவிட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கப்பலும் கட்டாரில் சரக்குகளை ஏற்றியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.கடந்த மே 22 ஆம் திகதி, அந்த கப்பல் இறுதியாக வளைகுடா பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த கப்பல் தற்போது ஓமன் மற்றும் ஈரானைப் பிரிக்கும் கடற்பகுதியில் நீரிணைக்கு வெளியே உள்ளதாகவும், எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி சீனாவை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›