LATEST
மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!
உள்ளூர்

சுகீஸ்வர பண்டார குழுவுக்கு பொலிஸ் அழைப்பு!

May 26, 2026 · Tamil Ceylon LK

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினருக்கு தலாங்கம பொலிஸாரினால் இன்று (26) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது வீட்டிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது சாணத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களினால் திருடப்பட்ட சம்பவம் குறித்து நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த மாதம் 28 ஆம் திகதி இக்குழுவினர் அவரது வீட்டிற்கு முன்னால் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். 

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மலக் சாணத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அங்கிருந்தவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›