LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உள்ளூர்

களுத்துறை துப்பாக்கிச்சூடு: சந்தேக சிற்றூந்து மீட்பு

May 28, 2026 · Tamil Ceylon LK

களுத்துறையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையது என சந்தேகிக்கப்படும் சிற்றூந்து ஒன்று, களுத்துறை – நேபொடபகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கான பயன்படுத்தப்பட்டது என சந்தேகிக்கப்படும் குறித்த சிற்றூந்து, களுத்துறை – மத்துகம வீதியூடாகச் சென்று, துடுகல சந்தியிலிருந்து கெந்தகடுவ வீதியை அடைந்துள்ளது.

பின்னர், அங்கிருந்து மீண்டும் மத்துகம – ஹொரண வீதிக்குள் நுழைந்து, நேபொட நோக்கிச் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, நேபொட அஞ்சல் நிலையத்துக்கு முன்னால் சிற்றூந்தை கைவிட்டுச் சென்றுள்ள நிலையிலேயே காவல்துறையினர் அதனை மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தற்போது வலான ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்துகம காவல்துறைப் பொறுப்பதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Stories

மேலும் ›