LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உள்ளூர்

காயத்தால் அவதிப்பட்ட யானையின் சோகம்

May 28, 2026 · Tamil Ceylon LK

மதவாச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட லுனுபஹிச்சாவ கிராமத்தின் கிகிலிகே வெவ பகுதியில் உள்ள பயிர்ச்செய்கை கிணறு ஒன்றிலிருந்து யானையொன்றின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 7 அடி உயரமும், 30 வயது மதிக்கத்தக்கதுமான ஓர் ஆண் யானையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை நீண்ட நாட்களாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக குறித்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த வலியைக் குறைத்துக்கொள்வதற்காக, இந்த யானை அடிக்கடி நீர்நிலைகளுக்குள் இறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று வலியைக் குறைப்பதற்காக இந்த விவசாயக் கிணற்றுக்குள் இறங்கிய யானை, அங்கேயே உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

யானையின் உடல் பல நாட்களாக கிணற்று நீருக்குள் மூழ்கிக்கிடந்த நிலையில், அதிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாகவே கிராம மக்கள் இதனை அவதானித்துள்ளனர்.

யானையின் மரணம் தொடர்பில் மதவாச்சி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Stories

மேலும் ›