எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகை எரிபொருட்களின் விலைகளிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் உயர்த்தப்பட்டு, புதிய விலை 407 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா சுப்பர் டீசலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 478 ரூபாயாகும்.
மேலும், ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 24 ரூபாயால் உயர்த்தப்பட்டு, ஒரு லீற்றர் 434 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 495 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மண்ணெண்ணெயின் விலையும் 20 ரூபாயால் உயர்த்தப்பட்டு, ஒரு லீற்றர் 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.




