வெளிநாடு செல்லத் தடையுடன் ஷான் விஜயலாலுக்கு பிணை அனுமதி!

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சந்தேக நபரின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு நீதவான் அசங்க எஸ். பொதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி, சந்தேக நபரை தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், சந்தேக நபர் வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதவான், அவரது வெளிநாட்டுக் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
Follow & Share




