மழையுடனான வானிலை!

இன்று (ஜூன் 14) அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும், பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.
குறிப்பாக, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், காற்றின் வேகம் தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”




