நானுஓயா – பதுளை இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

டிட்வா சூறாவளியின் தாக்கத்தினால் நானுஓயா முதல் பதுளை வரையான மலையக புகையிரத பாதையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகளைத் தொடர்ந்து, அங்கு புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், புகையிரத திணைக்களம் முன்னெடுத்திருந்த அவசர பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் குறித்த பாதையில் அனைத்து புகையிரத சேவைகளும் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. பயணிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மலையக புகையிரத போக்குவரத்து சேவை, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது குறிப்பிடத்தக்கது.
Follow & Share




