LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உள்ளூர்

14 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் கையளிப்பு!

June 19, 2026 · Tamil Ceylon LK

பிரதேச செயலகங்கள் ஊடாகக் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்று நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி நிதியத்தின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 14 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் இதன்போது வழங்கப்பட்டதுடன், ஜனாதிபதி நிதியத்தினால் இதற்காக 58 இலட்சம் ரூபா செலவிடப்பட்டது.

இதற்கமைய, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் சுமார் 30 மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி நிதியம் இதற்காக மொத்தமாக 98 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாயைச் செலவிட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Stories

மேலும் ›