உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ்!

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் நடைபெற்ற உலகின் முன்னணி தடகளப் போட்டிகளில் நான்கில் பங்கேற்று, மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கா, 06/20 அன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
மொராக்கோ, ரோம், செக் குடியரசு மற்றும் கத்தார் நாட்டின் தோஹா ஆகிய இடங்களில் நடைபெற்ற “டயமண்ட் லீக்” தடகளப் போட்டிகளில் பங்கேற்று ருமேஷ் தரங்கா தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த வெற்றிகளைப் பெற்ற ருமேஷ் தரங்கா, கத்தார் ஏர்வேஸ் விமானம் Q.R.-664 மூலம் தோஹாவிலிருந்து 06/20 அன்று மாலை 04.54 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
அவரை வரவேற்பதற்காக அவரது பெற்றோர், உறவினர்கள், விளையாட்டு அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.




