இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
பலத்த காற்று வீசும் பகுதிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கடலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு: ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும், முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறும் என்பதால் மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.”




