தனியார் பஸ் உட்பட 7 வாகனங்கள் மோதி பரிதாபம்!

கேகாலை, மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பஸ் ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 7 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டே இந்த விபத்து இடம்பெற்றதாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Follow & Share




