சீனி மோசடி முறியடிப்பு: களஞ்சியசாலை முகாமையாளர் கைது!

காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற சீனியை புதிய பொதிகளில் அடைத்து, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு விற்பனை செய்து வந்த பாரிய மோசடி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. மத்திய ஊழல் தடுப்புப் படையினரும் நுகர்வோர் விவகார அதிகார சபையினரும் இணைந்து நடத்திய விசேட சோதனையின் போதே இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பில் களஞ்சியசாலையின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow & Share




