தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு முக்கிய அரசியல் கட்சிகள் இன்று (13) கொழும்பில் ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை உறுதி செய்வது குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து ஒன்றிணைந்து குரல் எழுப்புவதற்கு வழிவகை செய்யும் ஒரு பொறிமுறையை உருவாக்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடல்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC – றிசாத் பதியுதீன் அணி), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC – ஜீவன் தொண்டமான் அணி), ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (DTNA), இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK – சிவஞானம் ஸ்ரீதரன் அணி), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMMC – SLEMPA Faction) ஆகியன என தெரிவிக்கப்படுகிறது. மனோ கணேசன் தரப்பினர்) ஒரு மேசையில் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளனர்.




