பல மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை மற்றும் காற்று எச்சரிக்கை!

இன்று சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ள அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
அதேபோல், நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் காற்றின் வேகம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Follow & Share




