சீனா, இந்தியா நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல்கள் திசைதிருப்பம்!

பாப் அல்-மண்டேப் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்த இரண்டு சவூதி கச்சா எண்ணெய் கப்பல்களை ஹூத்தி போராளிகள் திருப்பி அனுப்பியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மூன்று எரிபொருள் டேங்கர்களும் சீனா மற்றும் இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஹூத்தி போராளிகள் ஏற்கனவே ஆறு எரிபொருள் டேங்கர் கப்பல்களைத் திசை திருப்பிவிட்டதாகவும், சவூதி துறைமுகங்களைப் பயன்படுத்தும் அனைத்துக் கப்பல்களையும் தாக்குவோம் என எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், பாப் அல்-மண்டேப் ஜலசந்தியில் உள்ள சவூதி துறைமுகங்களைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கடற்படை முற்றுகையிடப் போவதாக ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் எச்சரிக்கையைச் செயல்படுத்தினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.




