சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணை!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு, இன்று (28) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு நேற்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் எதிர் மனுதாரர்களாகப் பெயரிடப்பட்ட குழுவினர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் நாயகம் சுஹர்ஷி ஹெரத், தமது வாதங்களை விரிவாக முன்வைத்தார்.
மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கான இறுதித் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
Follow & Share




