LATEST
டெங்கு மீண்டும் தீவிரம் – மக்கள் அவதானம்!விலங்குகளை காக்க யாலா தற்காலிகமாக மூடல்!சவூதி எண்ணெய் குழாய் மூடல்; உலக சந்தையில் அதிர்ச்சி!மின்னல், பலத்த காற்று – மக்கள் அவதானம்!22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!டெங்கு மீண்டும் தீவிரம் – மக்கள் அவதானம்!விலங்குகளை காக்க யாலா தற்காலிகமாக மூடல்!சவூதி எண்ணெய் குழாய் மூடல்; உலக சந்தையில் அதிர்ச்சி!மின்னல், பலத்த காற்று – மக்கள் அவதானம்!22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!
Uncategorized

சவூதி எண்ணெய் குழாய் மூடல்; உலக சந்தையில் அதிர்ச்சி!

September 14, 2026 · Tamil Ceylon LK

உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் (14) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. 

சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் ஒன்று மூடப்பட்டமை, சவூதி அரேபியா மீதான புதிய ஹூதி தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கில் கப்பல்கள் மீதான ஈரானியத் தாக்குதல்கள் காரணமாக இவ்வாறு சடுதியாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 

அதற்கமைய ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் 3.03% உயர்ந்து பீப்பாய் ஒன்று 107.51 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 

அதேநேரம் WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.72% உயர்ந்து 102.08 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. 

ஈராக்கில் இருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வெள்ளிக்கிழமை மூடப்பட்டதால், விநியோகத்திற்கான அபாயங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இன்று எண்ணெய் விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து சவூதி அரேபியா தனது ஏற்றுமதியை மாற்று வழியில் அனுப்ப உதவிய இந்த எண்ணெய் குழாயின் இழப்பு, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4% வரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

மேலும் ›