உயிர்களை காவு வாங்கும் வெப்ப அலை!

தென் கொரியாவைப் பாதித்துள்ள சீரற்ற வானிலை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு முந்தைய மிக வெப்பமான வானிலை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 39.6 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இன்று (06) வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பகலின் அதிக வெப்பமான நேரங்களில் வெளிப்புறப் பணியாளர்களுக்குக் கட்டாய ஓய்வு நேரங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஜனாதிபதி லீ ஜே-மியோங் அறிவுறுத்தியுள்ளார்.
Follow & Share




