சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!

தென் மாகாண பிரதி காவல்துறை மா அதிபராகப் பணியாற்றிய கித்சிறி ஜயலத், சபரகமுவ மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தர, சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரப் பிரிவுக்கு மேலதிகமாக, பயிற்சி மற்றும் மேம்பட்ட பயிற்சிப் பிரிவுகளின் பொறுப்புகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் கே.பி. கருணாநாயக்க, விசேட பாதுகாப்புப் பணியில் இருந்து வட மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வட மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் எச்.பி. சிறிவர்தன, தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Follow & Share




