LATEST
ஆகஸ்ட் 18 முதல் ஆசியக் கோப்பை – இலங்கை அணி அறிவிப்பு!டெங்கு பாதிப்பு 91,346 ஆக உயர்வு – தொடரும் அபாயம்!பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாடு முழுவதும் விசேட திட்டம்!19,892 புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை – பொலிஸார் விசாரணை!ஜெனீவாவில் இன்று இலங்கையின் CRPD முதல் மதிப்பாய்வு!நீதித்துறையின் சுதந்திரத்தைப் பணயம் வைக்க முடியாது!ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் அடுத்த கட்டம் – எதிர்தரப்பு விசாரணைக்கு நீதிமன்றம் தீர்மானம்!ட்ரம்பின் உயிருக்கு ஆபத்து என இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரிக்கை!ஆகஸ்ட் 18 முதல் ஆசியக் கோப்பை – இலங்கை அணி அறிவிப்பு!டெங்கு பாதிப்பு 91,346 ஆக உயர்வு – தொடரும் அபாயம்!பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாடு முழுவதும் விசேட திட்டம்!19,892 புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை – பொலிஸார் விசாரணை!ஜெனீவாவில் இன்று இலங்கையின் CRPD முதல் மதிப்பாய்வு!நீதித்துறையின் சுதந்திரத்தைப் பணயம் வைக்க முடியாது!ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் அடுத்த கட்டம் – எதிர்தரப்பு விசாரணைக்கு நீதிமன்றம் தீர்மானம்!ட்ரம்பின் உயிருக்கு ஆபத்து என இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரிக்கை!
உள்ளூர்

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசியவில்லை – பரீட்சைகள் திணைக்களம் உறுதி!

August 14, 2026 · Tamil Ceylon LK

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. 

எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் வழமை போல் அந்தப் பரீட்சை இடம்பெறும் எனவும் அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதனிடையே அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14) நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி முன்னதாக உறுதிப்படுத்தினார். 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. 

இவ்வாறான பின்னணியில், உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பாலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெறும் பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தன. 

இன்று நடைபெறவிருந்த இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் விනාத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

Related Stories

மேலும் ›