LATEST
கனமழையும் பலத்த காற்றும் – வானிலை எச்சரிக்கை!இலங்கையை நோக்கி ஆறாவது பெரும் சவால் – சஜித் எச்சரிக்கை!22வது திருத்தம்: சலியா பீரிஸ் எழுப்பும் கேள்விகள்!கைராங் மண்சரிவு – நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்!குழந்தைகள் விவகாரத்தில் மெட்டாவுக்கு நெருக்கடி!வெள்ள அபாயம் – இலங்கையர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு!நீதித்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவே 22வது திருத்தம் – நிலந்திவாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும் அரசுக்கு சமம் – பிரதி அமைச்சர்கனமழையும் பலத்த காற்றும் – வானிலை எச்சரிக்கை!இலங்கையை நோக்கி ஆறாவது பெரும் சவால் – சஜித் எச்சரிக்கை!22வது திருத்தம்: சலியா பீரிஸ் எழுப்பும் கேள்விகள்!கைராங் மண்சரிவு – நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்!குழந்தைகள் விவகாரத்தில் மெட்டாவுக்கு நெருக்கடி!வெள்ள அபாயம் – இலங்கையர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு!நீதித்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவே 22வது திருத்தம் – நிலந்திவாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும் அரசுக்கு சமம் – பிரதி அமைச்சர்
உலகம்

நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காணாமல் போன சோகம்!

August 27, 2026 · Tamil Ceylon LK

நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர். 

இந்த அனர்த்தத்தில் திபெத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் 265 பேரைக் காணவில்லை என சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நிலநடுக்கம் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர். 

எனினும் மண்சரிவு காரணமாகவே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. 

குறித்த அனர்த்தம் காரணமாக ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்துள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். 

நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் திடீரென நேற்று வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதன்காரணமாக அந்த பகுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். 

அதேநேரம் வௌ்ளம் காரணமாக பாரியளவில் உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›