LATEST
முற்றிலும் மாற்றப்படவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் அணி!மருத்துவ அறிக்கை கோரிய கொழும்பு கோட்டை நீதவான்!159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் புகார்!செல்சீயிலிருந்து மென்செஸ்டர் சிட்டிக்கு என்சோ பெர்னாண்டஸ்!24 மணிநேரம் தடைப்படும் நீர் விநியோகம் – பகுதிகள் அறிவிப்பு!பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பேராசிரியர்கள் போராட்டம்!கணக ஹேமச்சந்திராவை உடனடியாக பதவி விலகுமாறு அறிவிப்பு!செப்டம்பர் 2ஆம் திகதி UAE செல்கிறார் விஜித ஹேரத்!முற்றிலும் மாற்றப்படவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் அணி!மருத்துவ அறிக்கை கோரிய கொழும்பு கோட்டை நீதவான்!159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் புகார்!செல்சீயிலிருந்து மென்செஸ்டர் சிட்டிக்கு என்சோ பெர்னாண்டஸ்!24 மணிநேரம் தடைப்படும் நீர் விநியோகம் – பகுதிகள் அறிவிப்பு!பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பேராசிரியர்கள் போராட்டம்!கணக ஹேமச்சந்திராவை உடனடியாக பதவி விலகுமாறு அறிவிப்பு!செப்டம்பர் 2ஆம் திகதி UAE செல்கிறார் விஜித ஹேரத்!
உள்ளூர்

24 மணிநேரம் தடைப்படும் நீர் விநியோகம் – பகுதிகள் அறிவிப்பு!

September 2, 2026 · Tamil Ceylon LK

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை (03) முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே, நாளை இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. 

அத்துடன், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளுக்கும் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, குறிப்பிட்ட காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

மேலும் ›