ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட செய்தி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சுமார் 650 மில்லியன்........
Published March 8, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சுமார் 650 மில்லியன் டொலர் மதிப்பிலான 20,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க காங்கிரஸைத் தவிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கமைய, இஸ்ரேலுக்கு உடனடியாக அவற்றை விற்பனை செய்ய வேண்டிய அவசர நிலை உள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக ஆயுத விற்பனை மீதான காங்கிரஸ் மதிப்பாய்வுத் தேவைகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.