STEM கல்வி முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய பிரதமர்
கொழும்பு புர்ஹானி செரண்டிப் சர்வதேச பாடசாலையில்........
இன்று கொழும்பு புர்ஹானி செரண்டிப் சர்வதேச பாடசாலையில், நடைபெற்ற உலக ரோபோ ஒலிம்பியாட் (WRO) தேசியப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு பெரும் சிறப்புடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அதிகாரிகள், இன்றைய உலகம் வேகமாக மாறி வரும் நிலையில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் கவனம் செலுத்துவது ஒரு நாட்டின் தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், நாட்டின் ஒவ்வொரு மாணவருக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையில் கல்வி முறைமையை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் எதிர்காலத்தில் உலகளாவிய போட்டியில் இலங்கை மாணவர்கள் சிறந்து விளங்கும் வகையில் வலுவான அடித்தளம் அமைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த நிகழ்வு, மாணவர்களின் புதுமை சிந்தனை, ரோபோடிக்ஸ் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை ஊக்குவிக்கும் முக்கிய தளமாக அமைந்தது.