பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் ஜனிதா பெரேரா இன்று (8) உத்தரவிட்டுள்ளார்.
22 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகும்போது, விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
Follow & Share




