நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

இந்தியா இன்று தனது 79 சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி சமூக நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்த வேண்​டும் என்று அறி​வுறுத்தியுள்​ளார்...

Published August 15, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இந்தியா இன்று தனது 79 சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி சமூக நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்த வேண்​டும் என்று அறி​வுறுத்தியுள்​ளார்.

கடந்த 1947 ஆம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​கள் உதய​மாகின. இரு நாடுகளுக்குமிடையிலான பிரி​வினை​யின்​போது ஏற்​பட்ட வன்​முறை சம்​பவங்​களில் சுமார் 20 லட்​சம் பேர் உயி​ரிழந்​தனர். சுமார் 2 கோடிக்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​தனர்.

இதை நினை​வு​கூரும் வகை​யில் ஓகஸ்ட் 14 ஆம் திகதி, பிரி​வினை கொடுமை​கள் நினைவு தின​மாக அறிவிக்​கப்​பட்​டது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந் நிலையில், பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில்,

இந்த தினம் இந்​திய வரலாற்​றில் மிக​வும் துயர​மான நாள் ஆகும். நாட்டில் பெரும் எண்​ணிக்​கையி​லான மக்​கள் துன்​பம், வேதனை​களை அனுப​வித்​தனர். கற்​பனைக்கு எட்​டாத வகை​யில் மிகப் ​பெரிய இழப்​பு​களை எதிர்​கொண்​டனர்.

எனினும் தாங்க முடி​யாத வலி, வேதனையை மக்​கள் துணிச்​சலுடன் எதிர்​கொண்​டனர். வீழ்ச்​சி​யில் இருந்து எழுச்சி பெற்ற மக்​கள், வளர்ச்​சிப் பாதை​யில் பல்​வேறு மைல்​கற்​களை எட்டி புதிய சாதனை​களை படைத்​தனர். இந்த நாள் நமக்கு ஒரு படிப்​பினையை கற்​றுத் தரு​கிறது. நாம் சமூக நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்த வேண்​டும். இதன்​மூலமே நாட்​டின் ஒற்​றுமையை வலுப்​படுத்த முடி​யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *