முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் அரசு பயன்பாட்டுக்கு.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால , நாட்டில்...
Published September 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால , நாட்டில் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 50 உத்தியோகபூர்வ இல்லங்கள் எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் அல்லது பொருளாதார நடவடிக்கைகளுக்குப் மாற்றி பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் நேற்று கொழும்பில் உள்ள மலலசேகர மாவத்தை மற்றும் கெப்பட்டிபொல வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லங்களை ஆய்வு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.