நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு!

அம்பாறையில் சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் நேற்று சிறுவன் தனது சகோதரனுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். இதன்போது அருகில் உள்ள ஆற்றில் விழுந்த நிலையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை விபத்தில் 2 வயதுடைய சிறாஜ் முகம்மட் ஸயான் ஸகி என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Follow & Share




