இணையவழி குற்றச்செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது!

காலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்வடுகொட பகுதியில் நேற்று பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 110 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சந்தேகநபர்கள் 19 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடமிருந்து 58 கணினிகள், 79 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Follow & Share




