LATEST
எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க முன் மக்களின் கருத்தைக் கேளுங்கள்!சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணை!வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அரசு அடையவில்லை! கம்மன்பில குற்றச்சாட்டு.கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறு.விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க முன் மக்களின் கருத்தைக் கேளுங்கள்!சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணை!வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அரசு அடையவில்லை! கம்மன்பில குற்றச்சாட்டு.கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறு.விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!
உள்ளூர்

பல நீர்த்தேக்கங்கள் வான்பாயும் நிலை!

May 15, 2026 · Tamil Ceylon LK

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 21 பிரதான நீர்த்தேக்கங்களும், 19-க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றன. 

நீர்ப்பாசன பணிப்பாளர் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் குறிப்பிடுகையில், இன்று (15) காலை 6.00 மணி நிலவரப்படி இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். 

அநுராதபுரம் மாவட்டம்: ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் யாண் ஓயா நீர்த்தேக்கம். 

பதுளை மாவட்டம்: அம்பேவெல நீர்த்தேக்கம். 

ஹம்பாந்தோட்டை மாவட்டம்: லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கம். 

குருநாகல் மாவட்டம்: அம்பகொல வாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மெதியாய, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கம். 

கண்டி மாவட்டம்: நாலந்தா மற்றும் வாமடில்ல நீர்த்தேக்கங்கள். 

மொனராகலை மாவட்டம்: ஹதபானகல மற்றும் அலிகொடஆர நீர்த்தேக்கங்கள். 

புத்தளம் மாவட்டம்: இகிணிமிட்டிய மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்கள். 

மன்னார் மாவட்டம்: யோத வாவி. 

அதேநேரம் இன்று காலை 6.00 மணியளவில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,600 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுகிறது. 

லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 4 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,740 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. 

வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 3 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 700 கன அடி நீர் மாணிக்க கங்கைக்கு திறந்து விடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அலிகொடஆர நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 680 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு திறந்து விடப்படுகிறது. 

யாண் ஓயா நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு கதவு 6 அங்குலமாகவும், ஏனைய இரண்டு கதவுகள் தலா 4 அங்குலம் வீதமும் திறக்கப்பட்டுள்ளன 

தப்போவ நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›