LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
உலகம்

ரஷ்ய ‘நிழல் கப்பற்படை’ எண்ணெய் கப்பல் இடைமறிப்பு!

June 14, 2026 · Tamil Ceylon LK

ஆங்கிலக் கால்வாய் கடற்பரப்பில் பயணித்த ரஷ்யாவின் ‘நிழல் கப்பற்படைக்கு’ (Shadow Fleet) சொந்தமான எண்ணெய் எரிபொருள் கப்பல் ஒன்றை பிரித்தானியப் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

பிரித்தானிய ரோயல் மரைன் கொமண்டோக்கள் (Royal Marine Commandos), தேசிய குற்றவியல் முகவர் அமைப்பின் (National Crime Agency) அதிகாரிகள் மற்றும் ரோயல் வான்படையின் (RAF) வான்வழி ஆதரவுடன் சுமார் ஆறு மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட கூட்டு விசேட நடவடிக்கையின் போதே இந்த கப்பல் இடைமறிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்மைர்டோஸ்’ (Smyrtos) என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த எண்ணெய் எரிபொருள் கப்பல், தற்போது இங்கிலாந்தின் தெற்கு கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

மேலும் ›