ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!

ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணித்த வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் முழுமையான கடற்படை முற்றுகையை அமுல்படுத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையினால், இரு தரப்புக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தற்காலிகப் போர்நிறுத்தம் முழுமையாக முறிவடைந்துள்ளது.
இதனால், வளைகுடா பிராந்தியத்தில் ஒரு பெரிய போர் மூள்வதற்கான அபாயகரமான சூழல் மீண்டும் உருவாகியுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் விதிக்கப்பட்டிருந்த இந்த முற்றுகையை, ஜூன் மாதம் எட்டப்பட்ட பேச்சுவார்த்தை உடன்படிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா நீக்கியிருந்தது. எனினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததையடுத்து, ஹோர்முஸ் நீரிணையில் மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




