LATEST
டெங்கு பெருந்தொற்று அபாயம்! நோயாளிகள் 79,000-ஐ கடந்தனர்!105 நிறுவனங்கள்… 227 வங்கிக் கணக்குகள்!பெரும் பணமோசடி அம்பலம்!இனப்படுகொலை நினைவு – பாராளுமன்றத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!அணுசக்தி ஒத்துழைப்பில் அமெரிக்கா–சவூதி புதிய அத்தியாயம்!ரூ.150 கூடுதல் கட்டணம் வசூல்; தனியார் மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் அபராதம்!இன்று பிற்பகல் மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மனுவில் முக்கிய தீர்மானம்!அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் சிக்கலில்!டெங்கு பெருந்தொற்று அபாயம்! நோயாளிகள் 79,000-ஐ கடந்தனர்!105 நிறுவனங்கள்… 227 வங்கிக் கணக்குகள்!பெரும் பணமோசடி அம்பலம்!இனப்படுகொலை நினைவு – பாராளுமன்றத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!அணுசக்தி ஒத்துழைப்பில் அமெரிக்கா–சவூதி புதிய அத்தியாயம்!ரூ.150 கூடுதல் கட்டணம் வசூல்; தனியார் மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் அபராதம்!இன்று பிற்பகல் மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மனுவில் முக்கிய தீர்மானம்!அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் சிக்கலில்!
உள்ளூர்

இன்று பிற்பகல் மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

July 23, 2026 · Tamil Ceylon LK

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அதேநேரம் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். 

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை நீர்கொழும்பிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றராகக் காணப்படும். 

கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். 

கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›